கொள்ளை போகும் கனிம வளங்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

0 328
Stalin trichy visit

கொள்ளை போகும் கனிம வளங்கள் !
கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ளது கீரம்பூர் கிராமம். பச்சமலை அடிவாரப் பகுதியில் உள்ள குறிச்சி மலை பகுதி தரைமட்டத்தில் இருந்து சுமார் 2000 அடி உயரத்தில் பெரிய பெரிய ராட்சச பாறைகள் மற்றும் மரங்கள் அரிய வகை மூலிகை செடிகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள ராட்சத பாறைகளை மர்ம நபர்கள் அனுமதி இன்றி முற்றிலுமாக அளிக்கும் நோக்கில் அதிக அளவு மரங்கள் செடி கொடிகள் அடர்ந்திருக்கும் பகுதியில் உள்ள பாறைகளை ஆட்களை கொண்டு உளி மற்றும் சுத்தியலால் கொண்டு 5 அடி மற்றும் 7 அடி கற்களாகவும் அரளை கற்களாகவும் தினந்தோறும் வெட்டி எடுத்து கற்களை ஏற்றுவதற்காக மினி ஆட்டோ செல்வதற்காக பாதை அமைத்து அங்கிருந்து தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கற்களை விற்பனை செய்து வருகிறார்கள். இது பற்றி பலமுறை பொதுமக்கள் மற்றும் ஊர் கிராம மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிடாமல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் என்பது பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள். இது பற்றிய வீடியோ ஒன்று பொதுமக்களில் ஒருவர் நேரடியாக கல்வெட்டும் இடத்திற்கு சென்று எதற்காக எங்கள் ஊர் மலையில் கல்லை வெட்டி எடுக்கிறீர்கள் உங்கள் ஊரில் இருக்கும் மலையை வெட்டி எடுத்தால் சும்மா இருப்பீர்களா மலையை வெட்டி எடுப்பதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பற்றி சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் இயற்கை வளத்தை பேணி காக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளோம் அதை தனி நபர் ஒருவர் ராட்சச மலையை வெட்டி எடுத்து உரிமை கொண்டாடுவது தட்டிக் கேட்க வேண்டிய அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் அந்தப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.