லால்குடியில் நாளை மின்தடை
திருச்சி, ஆக.16 திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமிரிப்பு பணிகளுக்காக நாளை 17 ந்தேதி காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
லால்குடியில் உள்ள ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 17 ந்தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளான இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை. மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி,பச்சாம்பேட்டை,திருமணமேடு தெற்கு,மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.