திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
திருச்சி, ஜன.20 திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், சோழமாநகர், பத்தாளபேட்டை, பிரகாஷ் நகர், நவல்பட்டு, சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி, திருவெறும்பூர் தொழிற்பேட்டை,நேரு நகர், போலீஸ் காலனி, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளில் நாளை (21.01.2023) காலை 09:45 முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.