“ட்ரோன்” பயன்கள் குறித்து நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்
திருச்சி, ஜன.6 ட்ரோன் மற்றும் அதன் பயன்கள் குறித்து நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், ஆதிகுடி கிராமத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மற்றும் அதன் பயன் குறித்து நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.
ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS) என்றும் அழைக்கப்படும் ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் கண்காணிப்பு, வள மேலாண்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் துல்லியமான விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நவீன விவசாயத்தை மாற்றுகிறது. தாவர ஆரோக்கியம், மண் நிலைமைகள் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் குறித்த நிகழ்நேரத் தரவை வழங்குவதன் மூலம், விவசாயிகள் விளைச்சலை மேம்படுத்தும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க ட்ரோன்கள் உதவுகின்றன, அதே நேரத்தில் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கின்றன. இந்தியாவில், ட்ரோன் துறையின் விரைவான வளர்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளின் தேவை போன்ற சவால்களை நிவர்த்தி செய்வதில் அதன் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இதனை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா. சாம் குமார், ஜெ. சுரேந்தர், ச.சந்தோஷ், பு. சக்தி, க. ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்த வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ. வெங்கடா பிரபு, முனைவர். பா.குணா இணை பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப. நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம. சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செய்து காட்டினர்.