பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பிரச்சாரம் : சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
திருச்சி, மே 11 திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது . அதன் நடவடிக்கை கவலை அளிக்கிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கும் போது கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. இந்திய பிரதமர் எவரும் பிரதமர் நரேந்திர மோடியை போல் தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்ததில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது என்று கூறினார்.