சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் : எச்.ராஜா பேட்டி
திருச்சிமார்ச் 15 பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் நாளை மறுதினம் (17ந் தேதி)சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து
பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.