பச்சை மலையில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை, பச்சை மலையில் நடைபெற்ற அரசு விழாவில் 524 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீல் அரசின் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின்குமார், கதிரவன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், துறையூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா, கோம்பை ஒன்றியக்குழுத் தலைவர் ரவீந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.