தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் – நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் நீர் மோர் வழங்கல்
திருச்சி, மே 4 இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நல சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் தொகுதி சார்பில் 37வது நாளாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
துறையூர் தொகுதி தலைவர் நந்தகுமார் தலைமையில் மாநிலத் தலைவர் விருகை வி.என் கண்ணன் பொதுமக்களுக்கு நீர் மோர் ,பானகம் வெள்ளரி தர்பூசணி ஆகியவை கோடை வெயிலின் அக்னி நட்சத்திரம் தொடக்கத்தை முன்னிட்டு வழங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் டயர் வி சரவணன் மாவட்ட செயலாளர் எஸ். திருமுகம் மாவட்ட துணைத் தலைவர் மீசை பாலு. மாவட்ட துணை செயலாளர் வி கிருஷ்ணகுமார். துறையூர் தொகுதி தலைவர் என் நந்தகுமார். துறையூர் தொகுதி செயலாளர் சி. ராஜதுரை. துறையூர் தொகுதி பொருளாளர் ஏ எஸ் செந்தில்குமார். துறையூர் தொகுதி துணைத்தலைவர் எம்பிடிசி ஆர் கண்ணன். துறையூர் தொகுதி துணை செயலாளர் ஜி விவேக் அவை தலைவர் ஏ பி சி பாபு கௌரவத் தலைவர் சூர்யா பேட்டரி துரைசாமி செல்வராஜ் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் திருச்சி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.