ஒன்றிய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, மார்ச் 12 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிவெளியிட்டுள்ள அறிக்கையில்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை எதிர்க்கவும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம். தலைமை கழக அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பால்பண்ணை பேருந்து நிலையம் தஞ்சாவூர் ரோட்டில் இன்று மாலை சரியாக 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். கூட்டத்தில் மாவட்ட , மாநகர, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் , கழக செயலாளர்கள் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், வட்ட, வார்டு, கிளைகழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.