மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதையும், தெற்கு காட்டூர் கமலா நேரு நகரில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், ஆயில் மில் வ.உ.சி.தெருவில் சாக்கடை சுத்தம் செய்ததையும், குறிஞ்சி நகர் சாலையில் பைப் சரி செய்தல் பணியையும், ஆயில் மில் மெயின் சாலையில் மண்ணும் குப்பையுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், காட்டூர் மெயின் சாலையில் மண்ணும் குப்பையுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், காட்டூர் மெயின் சாலையில் தனியார் ஓட்டலில் இருந்து கழிவு நீர் ரோட்டில் ஓடுவதை தடுக்கும் விதமாக செய்ததையும், காட்டூர் மெயின் சாலையில் தனியார் ஓட்டலில் இருந்து வெளிவரும் கழிவுநீரை அகற்றிய இடத்தினை சுத்தம் செய்ததையும் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
