புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

0 650
Stalin trichy visit

திருச்சி,நவ. 28  திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியில் திருவரங்கம் கோட்ட ஆட்சியர் தெட்சிணாமூர்த்தி  தலைமையில்
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண ப்ரியா  முன்னிலை யில்ஆயிரம் மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை மாவட்ட நூலகர் சிவக்குமார், வாசகர் வட்டம் கோவிந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பேபி வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் லில்லி புளோரோ நூல்கள் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜவஹர், ராதா, செல்வி கலந்து மாணவர்களை
வாழ்த்தினர்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஜெயலெட்சுமி கதை சொல்லி கார்த்திகா
இல்லம் தேடிக் கல்வி இளஞ்சேட்சென்னி, காந்தி, பெல் சிட்டா மேரி, ஸ்ரீரங்கம் உதவி பெறும் பள்ளிகள் தாளாளர்கள் நகராட்சி மற்றம் உதவி பெறும் Uள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர்கள் வாசித்தனர் .  தலைமை ஆசிரியர் சைவராஜ் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.