மாநகர காவல் ஆணையர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பு

0 216
Stalin trichy visit

திருச்சி, நவ.26 இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் அனைத்து அலுவலர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்தனர்.

இந்திய அரசமைப்பு முகப்புரை

இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் | மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும்

சமுதாய, பொருளியல், அரசியல், நீதி,

எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு,

சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,

சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை

ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,

அவர்கள் அனைவரிடையேயும்

தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை,

ஒருமைப்பாடு இவற்றை உறுதிபடுத்தும்

உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும்

உள்ளார்ந்த உறுதியுடையராய்,

நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.