திருச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, ஆக.21 திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் சாலை விரிவாக்கப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் கோரையாறு கிழக்கு கரை ரோடு பகுதிகளில் சாலை அமைக்கும் வகையில் எடமலைப்பட்டி புதூர் முதல் கரூர் புறவழிச்சாலை வரை மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தற்போது இரண்டு தொகுப்புகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மூன்றாவது தொகுப்புக்கான இடத்தினையும் பார்வையிட்டு இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியயர் சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன். , நகரப் பொறியாளர்சிவபாதம், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர்அருள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.