சமத்துவ பொங்கல் விழா : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருச்சி, ஜன.11 திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புகையில்லா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், காட்டுப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் சுதா, செயல் அலுவலர் சாகுல்அமீது, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.