சாரண – சாரணியர் இயக்க வைரவிழா முன்னேற்பாடு
திருச்சி, ஜன.16 திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இவ்விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.