புனித செபஸ்தியார் ஆலய திருவிழா : அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
திருச்சி, ஆக.9 திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய 124 ஆம் ஆண்டு திருவிழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.