உழவர் நலத்துறை சார்பில் மானிய, நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்கள் வழங்கினர்
திருச்சிராப்பள்ளி கலையரங்கில் வேளாண்மை — உழவர் நலத்துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள், குறுவை சாகுபடி மாற்றுப் பயிர்கள், பழச்செடிகள் வழங்குதல், மானியத் திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (23.7.22) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.. இவ்விழாவில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு , மாண்புமிகு வேளாண்மை — உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வழங்கினர்.