திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கருமலை அருகே உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமுதராஜ்(37). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக புத்தாநத்தம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.