முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, மே 29 தமிழ்நாட்டில கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும், இவைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடி பேருந்துநிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு, வட்ட கழக நிருவாகிகள், உள்ளாட்சி ஒன்றிய பிரதிநிதிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.