கிணற்றில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மில்பழையகாலணியில் பொது கிணறு உள்ளது. அந்த கிணற்றில் அதிக அளவிலான மீன்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென கிணற்றில் மீன்கள் செத்து மிதந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிரோடு இருந்த மீன்களும் மயங்கி மயங்கி சிறிது நேரத்தில் இறந்து கொண்டே இருந்தது. குடியிருப்பு பகுதிக்கு நடுவில் உள்ள கிணற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் இறந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.