அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மலைக்கோட்டை கோவில் அறங்காவலர்கள்

0 274
Stalin trichy visit

திருச்சி, அக். 14 திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர்களாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்த பா.சீனிவாசன், திருச்சி, தாராநல்லூர் அலங்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மு.கருணாநிதி, மலைக்கோட்டை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த ரா.கலைச்செல்வி, திருச்சி, எடத்தெரு, கீழ நெய்க்கார தெருவை சேர்ந்த வி.ஸ்ரீதர்,காட்டூர் காவிரி நகரை சேர்ந்த மு.கோவிந்தராஜ் ஆகியோர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை   நேற்று (அக்.13) சந்தித்து வாழ்த்து பெற்றனர்‌. இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் ராஜ்முகமது மோகன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.