தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக.3 சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை 218 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருச்சி கிளை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இனிகோ இருதயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அவருடன் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,மற்றும் கொங்கு சேகர் மற்றும்திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி திரு.மு.க.முகேஷ் குமார் மற்றும் வட்டச் செயலாளர் திரு. கோவிந்தராஜ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.