சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை வழிபாடு
திருச்சி, நவ.22 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் எதிர்வரும் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தினத்தன்று இரவு 8 மணிக்கு அம்பாள் புறப்பாடு சுடலை தீபம் கண்டருளுதல், திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் அன்றைய தினம் பிற்பகல் 3.07 மணி முதல் மறுநாள் 27.11.2023 திங்கட்கிழமை பிற்பகல் 03.58 முடிய பௌர்ணமி உள்ளது என்று கோவில் இணைய ஆணையர், செயல் அலுவலர் சி.கல்யாணி தெரிவித்துள்ளார்.