திருச்சி மாநகர் – மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பாராட்டு
திருச்சி, மே 28 திருச்சி மாநகரில் நடந்து முடிந்த தேசம் காக்கும் ராணுவத்துக்கு சல்யூட் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு, தியாகி அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், மாநகர பொருளாளர் முரளி, மன்சூர் ஆகியோர் முன்னிலையில் நன்றி கலந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்வில் கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை ங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், உறையூர் பாக்கியராஜ், ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல், தில்லைநகர் கிருஷ்ணா, புத்தூர் மலர் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் எட்வின், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, NGO திருக்கண்ணண், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், மாணவர் காங்கிரஸ் நரேன்,விவசாய பிரிவு அண்ணாதுரை, அமைப்புசாரா மகேந்திரன், ஐ டி பிரிவு லோகேஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் ஜிம் விக்கி, கலை பிரிவு அருள், இந்திரா தோழி மாரீஸ்வரி, அன்பு ஆறுமுகம், வார்டு தலைவர் MRJ ஆரிப், பூபாலன், பெரியசாமி, ரமேஷ், செபஸ்தியார், மூர்த்தி, சையது பாய், செல்வராசு, பெல்ட் சரவணன், முஸ்தபா, விமல், மாரியம்மாள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு மதிய விருந்து வழங்கப்பட்டது