திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தலைமையில் தொலைநோக்குத் திட்ட கலந்தாய்வு கூட்டம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து துறைகளின் சார்பாக எடுக்கவேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது
திருச்சி கிழக்கு தாசில்தார் திருமதி. கலைவாணி, மாநகராட்சி, நகர்ப்புற வாழ்வியல் மேம்பாடு, போக்குவரத்து, சிவில் சப்ளை, குழந்தை நலன், பொது துறை, வேளாண்மை, சுகாதாரம்,சமூக நலன், நெடுஞ்சாலை துறை, மின் வாரியம் ஆற்று கோட்டம் உட்பட தொகுதிக்குட்பட்ட அனைத்து துறை சார்பான அலுவலர்கள் பங்கேற்றனர்.