திருச்சி அருகே டூவீலரில் மணல் கடத்திய 2 பேர் கைது

0 411
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஒட்டகுடி காவிரிகரையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் திருவெறும்பூர் தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்திச் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கீழமுல்லைக்குடி வளன்நகரை சேர்ந்த திருப்பதி(29), புத்தவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னராசு என்கிற வேல்முருகன்(23) என்பது தெரியவந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திருப்பதியின் சகோதரர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.