மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பர்மா காலனி மூலிகை பூங்காவில் முட்புதர்கள் நிறைந்த இடங்களை சீரமைக்கும் பணிகளையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும், ஜோதி புரத்தில் தண்ணீர் சரியாக வராமல் இருந்ததை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் சரியாக வராமல் இருந்த இடங்களை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளையும், பர்மா காலனி கணபதி நகரில் தண்ணீர் சரியாக வராமல் இருந்த ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.