தீராத தலைவலியில் அவதிப்பட்ட பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர்மூக்கன்
இவரது மனைவி செல்வம்,
செல்வம் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது இதனால் தனதுதாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது கணவரிடம் கூறிசென்றுள்ளார், மனவேதனையில் இருந்த செல்வம்
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் பாத்ரூம் கழுவுவதற்காக வைத்திருந்த ஆசிட்டைகுடித்துவிட்டதாகதெரிகிறது, அதனை அடுத்து அவரை துறையூரில் உள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் பெண் ஆசிட்டு குடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது