பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஆக.24 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கன்னிராஜாபட்டியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 32). இவருக்கும் முருகேசன் என்பவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.