திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் ஓட்டி சென்ற மொபட் மீது அவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று மோதியது. இதில் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆனாலும் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி கொண்டு சென்றார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த

பொதுமக்கள் லாரி டிரைவரை பிடித்து தாக்க முயன்றனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரி டிரைவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.