திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில், வந்த பயணிகளை மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அணிந்து வந்த வெள்ளிக் கொலுசினை சோதனை செய்தபோது அந்த கொலுசு வெள்ளி முலாம் பூசப்பட்ட தங்கம் என தெரியவந்தது இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 321 கிராம் எடைகொண்ட இந்த தங்க கொலுசுவின் மதிப்பி ரூ.17 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.