குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த சாக்கடை நீர் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி ஜூலை 17திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி , பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் R.K மண்டபம் பின்புறம் உள்ள 12 வது வார்டில் சாக்கடை கழிவுநீர் கடந்த ஒரு வாரமாக ரோட்டில் தேங்கியுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை 12 வது வார்டு கவுன்சிலர் இருக்கிறாரா இல்லை எங்கு சென்றுள்ளார் என்றே தெரியவில்லை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா என அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.