போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
திருச்சி ஜன.28-திருச்சி உறையூர் பாண்டமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக உறையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் இதில் அவர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுலைமான் (29) என்பதும் போதை மாத்திரை விற்றதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மூன்று ஊசிகள் மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.