தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பில் இணைந்த இளைஞர்கள்
திருச்சி, பிப். 19 தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் O.M பாலா அவர்களின் இல்ல காதணி விழாவில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பி. சந்தன பிரியா பசுபதி பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டனர். அதற்குப் பின்பு கருப்பூரில் நடைபெற்ற கபடி போட்டியை துவங்கி வைத்துவிட்டு, உறையூர் கிரீன் ஹவுஸ் ஹோட்டலில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது ,இதில் மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதிபாண்டியன் அவர்கள் தலைமையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது திருவரம்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவராக ரகுநாத், அந்தநல்லூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ், திருச்சி தெற்கு மாவட்ட துணை அமைப்பு செயலாளராக சிவசங்கர்,திருவரம்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பு செயலாளராக ஜீவா, பாலக்கரை பகுதி இளைஞரணி செயலாளராக மணிகண்டன், பாலக்கரை பகுதி இளைஞரணி அமைப்பாளராக அஜித், திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக கோடாப்பு வசந்த், மணிகண்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக வேம்பு, மணிகண்டம் ஒன்றிய துணை அமைப்பாளராக மகேந்திரன், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பாலாஜி, இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை நமது தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பில் இணைத்து கொண்டனர்,பொறுப்புகள் வழங்கப்பட்டது இதில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் A.P குட்டி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சத்யா, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் O.M பாலா, மாநில மாணவரணி செயலாளர் பிரவீன், திருவரங்கம் பகுதி செயலாளர் அகில்,திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சபரி, திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரூதீப், முன்னிலை வகித்தனர்,நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.