இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை – மளிகைப் பொருட்கள் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
கொரோனா ஊரடங்கால் பொருளாதார சிரமங்களை தவிர்க்கும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்க ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி முதல் தவணை கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதி தொகையும் 14 பொருள்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பும் இன்று முதல் (ஜூன்.15) வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையான ரூ.2000 வழங்கும் திட்டத்தை திருச்சி மலைக்கோட்டை பகுதி,15.A,வார்டின் கிழக்கு தாரநல்லூர் வசந்த நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் வழங்கினார்,இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.மதிவாணன், வட்ட செயலாளர் ராமலிங்கம் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்
