திருச்சி புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகிலுள்ள புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் வங்கி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு (18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு) கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் யாழினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாரயணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.