திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 31,790 பேர் குணமடைந்துள்ளனர்
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 42,651, குணமடைந்தவர்கள் 31,790, உயிரிழப்பு 394திருச்சி அரசு மருத்துவமனையில் 840 படுக்கைகள் உள்ளன. இதில் 353 ஆக்சிஜன் வசதியுடன், தற்போது மேலும் 150 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வருகிறது. சிறீரங்கம், மணப்பாறை அரசு மருத்துவமனைகள், யாத்திகா நிவாஸ், பாரதிதாசன் பல்கலை. காஜாமலை வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, 3 தனியார் கல்லூரிகளில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.