மணப்பாறை அருகே வழி தவறி வந்த வித்தியாசமான ஆந்தையை மீட்ட வனத்துறையினர்
மணப்பாறை அருகே வழி தவறி வந்த வித்தியாசமான ஆந்தையை மீட்ட வனத்துறையினர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நொச்சிமேடு அருகே போலீசார் அமைத்துள்ள செக்போஸ்ட் அருகேவித்தியாசமான ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆந்தையை பிடிக்க முயன்ற போது அது அங்கும் இங்குமாக சிறிது நேரம் பறந்து கொண்டே இருந்தது. பின்னர் காட்டுப்பகுதியில் வழியின்றி நின்றிருந்த ஆந்தையை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு பத்திரமாக எடுத்துச் சென்றனர்.