மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சர்வதேச உறுப்பினர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கொரோனா தடுப்பு பொருட்களை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார்
டெல்லியில் உள்ள உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், அதன் சர்வதேச உறுப்பினர் கவிஞர். ஜோ ரஞ்சித் 2000 முக கவசங்கள் மற்றும் 200 நீம் சோப் மற்றும் உணவு பொருட்கள் என 10,000 மதிப்பிலான பொருட்களை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார். அமைச்சர் உடனடியாக அதனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.