11,950 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொ ழி ஏற்பு
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பள்ளி, கல்லூரிகளின் 11,950 மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், காவல்துறை துணைத் தலைவர் சரவணக்குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்ளர் சுஜித்குமார், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, கதிரவன், அப்துல்சமது, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.