திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தை சோ்ந்தவா் ஞானமலா். இவரது 17 வயது மகன் துறையூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்தீர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி விளையாடுவதற்காக
வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுக்குறித்து மாணவனின் தாயார் கொடுத்த புகாரில் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும், சிக்கந்தம்பூர் பகுதியை சோ்ந்த சர்மிளாவுடன் அவா் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் துறையூர் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.