ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.
இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ன செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகின்றனர்.
உதவி ஆணையார்கள் கு.கந்தசாமி , செ.மாரியப்பன், மேலாளர் உமாமகேஸ்வரி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
