மரயானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 3ம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன் மரயானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.