எனக்கு கொரோனா தொற்று இல்லை – திருச்சி மாநகராட்சி ஆணையர் தன்னிலை விளக்கம்
கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகை தந்தார். இதையொட்டி அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தவறான தகவல்கள் ஊடகங்களில் பரவியது.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் (தொற்று இல்லை) என்று ரிசல்ட் வந்துள்ளதாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.