நோ கட்டவுட் – ஸ்டிட்டா சொன்னா அமைச்சர் அன்பில் மகேஷ்!

0 514
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்…
“செப்டம்பர் 1ம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தான் முதல்வர் கூறியுள்ளார்,நாளை இது குறித்த முறையான “செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம்” உள்ளது,அதில் முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள அனைவரும் கொரோனோ தடுப்பூசிகள் போட்டுள்ளார்களா என்பதை அந்த அந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டு அதனை உறுதி செய்து வருகிறோம். மாணவர்கள் இடை நிற்றல் ( drop out) கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது – அந்த லிஸ்ட் வந்தவுடன் அதை வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கட் – அவுட் பேனர்களை வைக்ககூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுக என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது – போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைபாடு,திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன்,ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்று கிடையாது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு மிக மிக குறைவாக தான் தேர்வெழுத உள்ளனர் – இதற்கு காரணம் கொரோனோ மற்றும் பள்ளிகள் இல்லாதது, நம்மைப் பொருத்தவரை நீட்டில் இருந்து விலக்கு பெறுவதே” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.