துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு!
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, துறையூர் நகரம்-பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரப் பகுதியிலும், புதிதாக திட்டமிடப்பட்டுள்ள ஆத்தூர்-பெரம்பலூர் பைபாஸ் சாலைப் பகுதியிலும், துறையூர்-ஆத்தூர் சாலையிலும் என மூன்று இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், துறையூர் வட்டாட்சியர் கோ.புஷ்பராணி, துறையூர் நகராட்சி ஆணையர்(பொ) எம்.முருகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.