குழுமாயி அம்மன் கோவில் அருகில் தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு

0 770
Stalin trichy visit
இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் கருதி வரும் நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏ பிரிவு வாய்க்கால்கள் மற்றும் பி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் நீர்வளத் துறை செயற்பொறியாளர் மணிமோகன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.