175 மாணவ, மாணவிகளுக்கு தனது சம்பளத்தை கல்வி உதவி தொகையாக வழங்கினார் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தனது தொகுதியில் கல்வி உதவித்தொகை கேட்டு மனு கொடுத்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 175 மாணவ மாணவியர்களுக்கு தனது சட்டமன்ற பணிக்கான சம்பளத்தை சுமார் 6 லட்சம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக பகிர்ந்தளித்தார்,

உடன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளரும் 3வது மண்டலகுழு தலைவருமான திரு.மு.மதிவாணன்,2வது மண்டலகுழு தலைவர் திருமதி. ஜெய நிர்மலா, பாலக்கரை பகுதி பொறுப்பாளர் திரு. டி.பி.எஸ்.எஸ்.ராஜ் முகமது, மற்றும் வட்டக் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனி ருந்தனர்.