திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வாலையூர் கிராமத்தில், அல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.சங்கரனின் மகன் பிரதீப் நடத்திவந்த அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.