மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பர்மா காலனி நேதாஜி சாலையில் உள்ள நியாயவிலை கடையில் பொருட்களின் தரம் சிறப்பாக உள்ளதா என்பதையும், அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் பொருட்கள் சிரமமின்றி கிடைக்கிறதா என்பதையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணிக்கு கான்கிரீட் போடும் பணியையும், மலையப்ப நகரில் சாக்கடையை தோண்டும் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் ரோடு போடும் பணிக்காக சாலையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைப்பினை சரி செய்யும் பணியையும், மலையப்ப நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அக்கோயில் திருப்பணிக்காக சுற்றியுள்ள இடங்களை சரி செய்யும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.